Thursday 16th of May 2024 11:41:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
பொலிஸ், சிவில் அதிகாரங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்!

பொலிஸ், சிவில் அதிகாரங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்!


இரண்டாம் இணைப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக அட்மிரல் சரத்வீரசேகரவும் பாதுகாப்பு உள்விவகார, இடர்முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்சவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

முன்னைய இணைப்பு

இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் ஒன்றாகிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் குறித்த நியமனம் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் அதிகாரம் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரம் என்பன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்ப அமைச்சுக்கள் சில நாட்களுக்கு முன்னர் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தும் தமிழ் எம்பிக்களின் உறுப்புரிமைகளைப் பறிக்கவேண்டும் என்று சபையில் வீரசேகர நேற்று உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE